மைசூர் பல்கலைகழக வரலாற்று துறை தலைவர் பேராசிரியர். எம்.வி . ஸ்ரீநிவாஸ் (72 ),அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையை "வரலாற்று வரைவியல் விவாதங்கள் " என்ற தலைப்பில் வெளயிட்டார் அவரிடம் ஆய்வு குறித்து பேசுகையில் அவர் பகிர்ந்து கொண்டதாவது:
(இடது புறம் உள்ளவர் பேராசிரியர் எம்.வி. ஸ்ரீநிவாஸ்)
பிறந்து வளர்ந்ததெல்லாம் கிராமத்து பின்னணியில் தான் .எங்கள் குடும்பம் ஒரு நடுத்தரகுடும்பம். பின்னர் கல்விகற்று இன்று மைசூர் பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றுகிறேன்.
இந்த தலைப்பை தேர்ந்தெடுத்து ஆய்வு கட்டுரை சமர்பிக்க காரணம் நமது வரலாற்று நூல்களில் உள்ள பிழையான பதிவுகளை அடையாளபடுத்துவது தான். இந்த தவறுகளின் தன்மைகளையும், அதன் விளைவுகளையும் விளக்கியுள்ளேன். மேலும் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் சொல்லியுள்ளேன். நம் ஆய்வை சார்ந்த அனைத்து மூல தரவுகளையும் தேடி படிக்கவேண்டும் . அது ஐரோப்பிய மொழியோ அல்லது பாரசீக மொழியோ அதனை முழுமையாக கண்டு அறியவேண்டும். எனது ஆய்வில் மைசூர் மற்றும் பீஜப்பூர் அரசுகளுக்கிடையே நடைபெற்ற போரில் இரு நாடுகளும் தாம் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளன. இதன் வரலாற்று பின்னணியுடன் பிழைகளை கண்டரிந்துள்ளேன்.
இங்கு பலதரப்பட்ட துறைகளில் பல அரிய ஆய்வுகள் மேற்கொள்ள முடியும். அது தேர்ந்தெடுக்கும் துறை, ஆய்வு காலம் மற்றும் தேர்வு செய்த தலைப்பை பொருத்ததாகும். ஒரு ஆய்வாளர் தனது துறையையும்,ஆய்வு தலைப்பையும் தனது ஆர்வத்தினாலும் , தனி விருப்பதினாலும் அதன் பயனை முன்னிடுமே தீர்மானிக்கிறான். அதேவேளையில் ஒரு நல்ல ஆராய்ச்சி 'கைடு' வை தேர்வு செய்யவேண்டும். அதற்க்கு முன்பு நாம் ஆய்வுக்கு எடுத்துள்ள துறை சார்ந்து ஆழமாகவும் , விரிவாகவும் புத்தகங்களை வாசித்திருக்க வேண்டும்.
புதிய தலைமுறை ஆய்வாளர்கள் சிறந்த வழியில் ஆய்வு மேற்கொள்ள புதிய 'தியரி' களும்,' மாடல்' களும் அதிகளவில் வந்துள்ளன. இந்த ஆய்வுமுறைகளை திரும்ப திரும்ப செய்து பார்ப்பதன் வாயிலாக புதிய வழிமுறைகளை சிறப்பாக செயல் படுத்தமுடியும். இதனால் நமது வரலாற்று பணிகளை அதிகரித்து கொள்ள முடியும்.
இதுவரை , 13 மொழிகளில் , 26 புத்தகங்கள் எழுதியுள்ளேன். இன்னும் வரலாற்று ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்வேன். இன்றைய கலா சூழலில் பள்ளிகளில் கர்பிகபடும் வரலாறு கல்வி மாணவர்களை ஆய்வு துறை சார்ந்து இயங்க போது மானதாக உள்ளதா? என்ற கேள்வியை பலர் எளுபுவதுண்டு . வரலாறு என்பது நமது கல்விமுறையின் ஒரு முக்கிய பகுதியாக திகழ்கிறது. அங்கு அளிக்கப் படும் கல்வியின் வாயிலாக மாணவர்கள் மத்தியில் தாக்கம் ஏற்பட்டு அதனால் ஆய்வு துறை சார்ந்து செயல்பட தூண்டும்.'