Popular Posts

Sunday, February 5, 2012

இயந்திரமயமாக்கப்பட்ட மீன் பிடி படகுகளால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு

இயந்திரமயமாக்கப்பட்ட மீன் பிடி படகுகளால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு 
ஆய்வாளர் அனுராதா

 அனுராதா .த (33 )சென்னை லயோலா கல்லூரி பொருளியல் துறை விரிவுரையாளர், ஆய்வின் தலைப்பு 'இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடித்தலின் விளைவுகள்' .
இந்த தலைப்பை தேர்ந்தெடுக்க காரணம்  சுனாமி நிகழ்வே ஆகும் . அச்சமய த்தில் அம்மக்களின் கஷ்டங்களை நேரில் அறிய வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய எண்ணினேன் ஆதலால் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.  
தமிழகத்தில் இயதிரமயமாக்கப்பட்ட மீன் பிடி முறை 1983 - ஆண்டு  இந்தோ நார்விஜியன் ஒப்பந்தத்தின் வாயிலாக நடைமுறை படுத்தப்பட்டது. அதன் வாயிலாக மீன்பிடித்தொழில் இன்று பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது . இதனால் சாதாரண மீனவ மக்கள் பயனடைந்துள்ளனர், அதேவேளையில் மீன் பிடி சாராத மக்களும் இத்தொழிலில் நல்ல வருமானம் பார்க்கின்றனர். இந்தியா மீன் உற்பத்தியில் உலகளவில் சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக் கிறது. மேலும் கடல் வுணவு ஏற்றுமதியால் அன்னியசெலாவனியும் அதிகரி த்துள்ள்ளது. மேலும் கடல் சார்ந்த தொழில் முறைகளும் அதிகரித்துள்ளது இதனால் பலரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

       அதேவேளையில் பல பின்னடைவுகளும் ஏற்ப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும் . இயந்திர படகுகள் ஆழ்கடலில் சென்று மட்டுமே மீன் பிடிக்கவேண்டும் என்ற விதி வுள்ளது. ஆனால் அது கடை பிடிக்கபடு வதில்லை. இதனால் கரையோரம் மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இம்முறையால் சிறிய வகை மீன்கள் முதல் குஞ்சுகள் வரை அரித்து எடுக்கப்படுவதால் மீன் வளம் குரயத்தொடங்கி யுள்ளது. அதேவேளையில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை உயர்வால் மீனவர்களால் சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டு மீன் விலை ஏற்றம் பெறுகிறது. அதனால் சராசரி மக்களால் மீன் உணவை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இம்மக்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவிகள் உரிய முறையில் சென்றடை வதில்லை. இதனால் அவர்கள் துன்பபடும் நிலைதான் நிலவிவருகிறது. இதனை தவிர்க்க  'பே ஆப் பெங்கால்' எனும் பன்னாட்டு அரசு தொண்டு நிறுவனம் உதவி வருகிறது.

 இந்நிறுவனத்தின் வாயிலாக கடற்கரை சார்ந்த மக்களுக்கு சுயதொழில் பயிர்ச்சிகளும், மாற்று வேலைவைப்புக்கான பயிர்ச்சிகளும் மற்றும் பேரிடர் காலங்களில் உதவி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதி மீனவர்களின் மீன்பிடிமுரைகளை ஆய்வு செய்ததால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அறிய முடியவில்லை. மீனவ பெண்கள் குறித்த புத்தகம் எழுதிக்கொண்டுள்ளேன். விரைவில் வெளி இடுவேன்' என்கிறார்.

No comments:

Post a Comment