Popular Posts

Sunday, February 5, 2012

thennindhiya varalattru peravaiyin 32 amarvu oru paarvai

தெனனிந்திய வரலாற்று பேரவையின் 32 வது அமர்வு "ஒரு பார்வை" 

வரலாற்று துறை ஆய்வு அறிஞர்களும் ,கல்வியாலர்களும் சங்கமிக்கும் திருநாளாகிய  தெனனிந்திய வரலாற்று பேரவையின் 32 ஆம் ஆண்டு அமர்வு சென்னைப் பல்கலைகழகத்தில் பிப். 3 -5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது . இந்நிகழ்வில் தமிழகம்,ஆந்திர ,கேரளா, கர்நாடகா ,புதுவை மற்றும் ஓடிஸா ஆகிய தென் மாநில வரலாற்றறிஞர்கள்   ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.    
 இந்நிகழ்வில் ஆய்வு கட்டுரைகளை வரலாற்றுவரைவியல் மற்றும் புராதன வரலாறுகள், சமூகவியல், பொருளியல், அரசியல் மற்றும்  கலாசாரம் ஆகிய ஐந்து பெரும் பிருவுகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியின் துவக்க நாளான  வெள்ளி அன்று பழமையான நாணயங்களின் கண்காட்சி நடைபெற்றது.  இக்காட்சியில் சோழர் கால நாணயங்கள் , முகாலாய ,விஜயநகர, கிழக்கிந்திய கம்பனி மற்றும் தற்கால நாணயங்களும் பணத்தாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
 இக்கண்காட்சியை இந்திய வரலற்றுதுரை  மாணவர் குகன் பாபு அழகேசன்  நடத்தினார் அவரிடம் உரையாடியதிலிருந்து; 
 "இங்கு வைக்கப்பட்டிருக்கும் சோழர்களா நாணயங்கள் தமிழகத்தின் மைய மாவட்டங்கலான் திருச்சி ,தஞ்சை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் காவிரி கரையோரங்களில் சேகரிக்கப்பட்டவை, விஜயநகர மற்றும் முகலாய காலத்து நாணயங்கள் தேசிய அளவில் நடைபெறும் நாணய கண்காட்சியில் இருந்து வாங்கப்பட்டவை. ஆங்கிலேயர் கால் நாணயங்கள் நாணய வங்கிகளில் இருந்து பெறப்பட்டவை .
 இவற்றில் சிறப்பு என்னவென்றால் எட்வர்டு கால நாணயங்கள் தான். ஏனெனில் பலருக்கு எட்வர்டு பற்றி தெரியாது . விக்டோரியா மகாராணிக்கும்,ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கும் இடைப்பட்டகாலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரின் ஆட்சியின் அடையாளங்களாக அவை திகழ்கின்றன. பழங்கால நாணயங்களில் சிறப்பு வாய்ந்தது கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தங்கம் ,மற்றும் வெள்ளி நாணயங்களை குறிப்பிடலாம். 

வெளிநாட்டு  நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் மொத்தம் 75 நாடுகளை சேர்ந்தவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சேகரிக்க ,மொத்தம் ஒன்னரை லட்சம் ரூபாய் செலவானது. 
 இவை அனைத்தும் எனது சொந்த உழைப்பில் சேகரித்தவை. படிப்பை பத்தாம் வகுப்புடன் நிறுத்தி வேலைக்கு சென்றேன் . அப்பொழுது கிடைத்த சம்பளத்திலிருந்து வாங்கியவை தான் இவை, பெற்றோரும் தங்களால் இயன்றவரை உதவி செய்தனர் .
இவ்விழாவில் கண்காட்சிக்கு வைக்கவேண்டும் என துறை தலைவரிடம் அனுமதி கேட்டேன் அவர் பெரிய நிகழ்வு இங்கே தரமற்ற படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டால் பார்வையாளர்கள் விரும்பமாட்டார்கள் ஆகையால் மாதிரியை சமர்ப்பிக்கும் படி கேட்டார் . நான் அளித்த மாதிரியை பார்த்தவர் உடனடியாக அனுமதி அளித்தார். இன்று பலரும் வந்து பார்வயிட்டு வால்த்திசெல்கின்றனர். இவற்றில் உயரியதாக நான் கருதுவது தொல்பொருள் ஆரைச்சிதுரையினர் வந்து பாராட்டியதுடன் வருங்காலத்தில் ஆய்வுகளுக்கு தேவையான பழங்கால நாணயங்களை வழங்குவதாக கூரிசென்றனர் இது எனது முயற்ச்சிக்கு கிடைத்த உயரிய வெகுமதி எனகருதுகிறேன்" என்கிறார் .


No comments:

Post a Comment