Popular Posts

Sunday, February 5, 2012

velgalthaan kongu mandalaththin moodhaadhayargal.-aaraaichiyaalar sasikala

'வேள்'கல்தான் கொங்கு மண்டலத்தின் தொல்குடிகள் 

32 வது தென்னிந்தியா வரலாற்று பேரவையில்  வரலாற்று வரைவியல்  மற்றும் புராதான வரலாறு பிரிவுகளின்கீழ்  நடைபெற்ற ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வில் கொங்கு மண்டல வரலாற்றை விவரித்து தனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தார் சசிகலா(33 ) .

         சென்னை தொல்பொருள் துறை ஆராய்ச்சி துறை ஆய்வு மாணவியாகிய அவரிடம் பேசியதிலிருந்து :

பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை மாவட்டம் . அப்பா கரூர் பகுதியை சேர்ந்தவர் ஆதலால் கொங்கு மண்டல தொடர்பு பிறப்பிலே உண்டு. வேலை வேண்டும் என்ற சராசரி மனப்பான்மையுடன் , இளம் அறிவியல் பட்டம் பெற்றேன் .ஆனால் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு முதுகலையில் தமிழ் சங்க இலக்கியம் படித்தேன். அவ்வேளைகளில் வரலாற்று ஆய்வுகள் குறித்து நிறைய தெரிந்து கொண்டேன். பின் சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி துறையல் வரலாற்று ஆய்வு குறித்த பட்டயபடிப்பு முடித்தேன். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தின் வரலாற்றை அறிய விரும்பினேன் . ஆகையால் எனது ஆய்வின் தலைப்பை "கொங்குநாட்டு புராதான வரலாறு சங்கஇலக்கியத்தின்  வாயிலாக ஒரு பார்வை" என்று தேர்ந்தெடுத்தேன். 
கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கோவை,ஈரோடு,சேலம்,நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் "வேள்"கள்  எனும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ள்ளனர். இவர்களே அப்பகுதியின் தொல்குடி மக்களின் அரசர்கலாக விளங்கியுள்ளனர். இப்பகுதியில் இயற்கையிலே மணிகள் (gems ) அதிகளவில் கிடைத்துள்ள்ளன இதனால் இப்பகுதி மக்கள் அதனை சார்ந்த தொழில் ஈடுபட்டு வெளிநாடுகளிலும் வாநிபத்தொடர்பு கொண்டுள்ளனர். இதற்க்கு தற்போதய கரூர் மாவட்ட முசிறி நகரம் துறை முகபட்டினமாக விளங்கிவந்துள்ளது. இவ்வேள்கள் எண்ணிக்கையில் பலவாக இருந்தனர் . அவர்கள் தங்களுக்குள் தொடர்ச்சியாக போரிட்டு கொண்டிருந்தனர். 

இன்று 'காங்கேயம் ' என்றழைக்கப்படும் பகுதி பண்டைய காலத்தில் 'காமூர்' என அளிக்கப்பட்டுள்ளது . காங்கயம் என்றால் நீர் சூழ்ந்த நிலபகுதி என பொருள் நீர் சூழ்ந்த பகுதியில் கால் நடை வளர்ப்பு என்பது முக்கியதொளில் குறிப்பாக அக்காலத்தில் மாடு செல்வமாக கருதப்பட்டது. இதனால்தான் இப்பகுதியில் இன்றளவும் கால்நடைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இப்பகுதியை ஆண்ட வேள் மன்னன் 'கழுவுள்' என அலைக்கப்பட்டுல்லான் . இம்மன்னனை எதிர்த்து 14 வேள் கள் சண்டையிட்டு அப்பகுதியை கைப்பற்றிய தாகவும், அதனை தொடர்ந்தே சேரன் இந்நாட்டை வெற்றிகொண்டான்.  சேரன் ஆட்சி ஒரு வணிகத்தை மையமாக கொண்டே மூவேந்தர் ஆட்சிகளும் விளங்கின .பின்னர் பொருளாதார சிரழிவு மற்றும் போர்களினால் மூவேந்தர்களும் தங்களின் செல்வாக்கை இழந்தனர். ஆனால் வேள்கல்  11  ஆம் நூற்றாண்டுவரை மக்கள் மத்தியில் சிறப்புற்று விளங்கியுள்ளனர். இதற்க்கு சான்றுகள் தமிழகத்தின் கடைஎழு  வள்ளல்களும் வேல்களே . ஆகையால் கொங்கு பகுதி மக்களின் வாழ்வோடு வொன்றிய வேல்களே அப்பகுதி மக்களின் தலைவர்களாக விளங்கினர் என்பது தெரிய வந்துள்ளது.  வரலாற்றாசிரியர்கள்  மன்னன் ,வேள் மற்றும் வேந்தன் என தமிழக ஆட்சிமுறையை பிரிக்கின்றனர். இதில் மன்னன் என்பது இனக்குழு தலைவர் என்றும் வேள் என்பது பல இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்த பகுதி என்றும் வேள் களுக்கு பின்னர் வந்தவர்களே வேந்தர்கள் என்று அறிய முடிகிறது. மேலும் சங்க இலக்கியத்தில் வேந்தன் என்ற சொல்லே இடம் பெறவில்லை.
இவற்ற்றை கொடுமணல் (ஈரோடு)ஆய்வுகளும், பொருந்தில் (பழனி) ஆய்வுகளும் தெரிவிக்கின்றன'. என்கிறார்.

மேலும்' இன்றைய திரை படங்களில் வரலாறு தவறாக் சித்தரிக்கபடுகிறது. படைப்பாளிகள் தங்கள் என்னகளுக்கேர்ப்ப வரலாற்றில் தமது கருத்தாக்கங்களை திணிக்கின்றனர். இது வரலாற்றை பிரள செய்யும் . அதே போல இன்றைய இளம் தலைமுறை மக்கள் வரலாற்றை புரந்தல்லுகின்றனர். என்னதான் படித்து பெரிய பணிக்கு போனாலும் நம் வரலாறு தெரியவில்லை என்றால் அவர்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்திட முடியும். முதலில் தன்வரலாற்றை  அறிந்தால்தான் எதிர்காலத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும் ஆகையால் அனைவரும் வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதது ஆகும்'என்கிறார்.

No comments:

Post a Comment