Popular Posts

Sunday, October 2, 2011

இலவச கல்வி அளிக்கும் கல்லுரி மாணவர்கள்



சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் ஏழை மாணவர்களுக்கு இலவச 'ட்யுசன்' நடத்தி வருகின்றனர் மூன்று இளைஞர்கள் .
 கல்லுரி மாணவர்களான நாக பூஷணம் , ரவிகாந்த், வீராசாமி ஆகியோர் தம் பகுதி மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டி கடந்த ஓராண்டாக அப்பகுதியில் உள்ள ஆதி ஆந்திர சமதர்ம சங்க கட்டிடத்தில் மாலை நேர இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். 
இம்மையத்தில் 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் . இதன் காரணமாக மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைந்துள்ளது . படிப்போடு நின்று விடாமல் அவர்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். 
இது குறித்து நாக பூஷணம் கூறுகையில் , நான் அரசு கல்லூரியில் மென்பொருள் தொழில் நுட்ப கல்வி படித்து வருகிறேன் . நான் படிப்பதற்கு மிகுந்த சிரமமம் ஏற்ப்பட்டது .எப்படியோ தடைகளை தண்டி படித்து விட்டேன் ஆனால் இங்கு நிறைய பேர் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் .அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை கடந்த ஆண்டு தொடங்கினோம்.

veera sivadevan: vinayagar sadhurthy silai karaippu

veera sivadevan: vinayagar sadhurthy silai karaippu: பட்டினப்பாக்கம் கடற்கரை பிள்ளையார் சிலைகளினால் நிரம்பி வழிந்தது